| 245 | : | _ _ |a சந்தையூர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் சந்தையூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வந்தபோது கூளப்பநாயக்கரும், வீரணன் சேருவையும் பாதகாணிக்கை வைத்து வணங்கி மரியாதை செய்தனர். வீரணன் சேர்வைக்கு 18 பட்டி கிராம காவல் நாட்டாண்மை, சாதி கம்பிளிக்கார அதிகாரம் ஆகியவை முன்பு கூளப்ப நாயக்கனால் தரப்பட்டிருந்ததை திருமலை நாயக்கரும் ஏற்று உறுதிசெய்தார். கூடலூர் கம்பம், உத்தப்ப நாயக்கன் வெள்ளை மலை, மதுரை மேலவாசல் ஆகிய எல்லைக்கு உட்பட்ட வலையன் மூப்பன்மார் வாழும் பகுதிக்கு வீரணன் சேருவை சாதி மூப்பன் எனப் பட்டம் கொடுத்து அவ்வூர்களில் தீர்ப்புச் சொல்ல கம்பளி விரித்து பிடி செம்புடன் அமரும் அதிகாரமும் வழங்கப்பட்டது. அப்படி அமரும்போதும் தீர்ப்பளித்து எழும் போதும் அவருக்கு தட்டில் வெற்றிலைப் பாக்குடன் 5 பணம் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டு பட்டயம் வழங்கப்பட்டது. சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஓம்படைக் கிளவியில் சதுரகிரி சிவன், பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2014 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மதுரை, சந்தையூர், கூளப்ப நாயக்கர், திருமலை நாயக்கர் |
| 752 | : | _ _ |a சந்தையூர் |c சந்தையூர் |d மதுரை |f பேரையூர் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1675 |
| 914 | : | _ _ |a 11.2578879 |
| 915 | : | _ _ |a 77.1073454 |
| 925 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00039 |
| barcode | : | TVA_CPS_00039 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |